உலகச் செந்தமிழ் மாநாடு, நாளை முதல் மிகச் சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் தொடங்க இருக்கிறது. முதுபெரும் கலைஞர், செந்தமிழ் காவலர், தமிழக முதல்வர், முனைவர். மு.கருணாநிதி அவர்களின் வாழ்க்கைச் சாதனையாக இந்த மாநாடு அமையும். தமிழர்கள் நிச்சயமாக அடுத்த தேர்தலில் தி.மு.க. க்கு வாக்குரிமைகளை அளித்து தங்கள் நன்றியினை தெரிவித்து விடுவார்கள். இது ஒரு குறிக்கோளாக இருக்கலாம். இன்னும் பல குறிக்கோள்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு குறிக்கோளை மட்டும் யாரும் வெளியிட்டதாக தெரியவில்லை. அதுதான் பழம் பெரும் தமிழர் கலாசாரம், அவர்கள் ௨௦௦௦ ஆண்டிற்கும் முன்பு பெற்றிருந்த அறிவு (இன்றைக்கும் நம் வாழ்க்கை முறையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்) ஆகிய இவைகள் பற்றியும் அறிந்து அதைக் கடைப்பிடித்தல். அய்யன் திருவள்ளுவர் எழுதிய குறட்கள் இன்றும் நமக்கு வாழ்க்கை வழி காட்டியாக திகழ்கின்றன. இன்று முதல், எனக்குப் பிடித்த குரட்களை வெளியிட விரும்புகிறேன். முனைவர் மு.வரதராசனார் அவர்களுடைய தெளிவுரையிலிருந்து எடுக்கப்பட்டவை. நான் தமிழ் புலவன் அல்ல, தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திரித்திக்கொள்ளுகிறேன். வாருங்கள் பார்ப்போம்:
௧.
அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அது போல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
௨.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் பொது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
௩.
வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின்
மெலியோர்மேல் செல்லும் இடத்து.
அருள் இல்லாதவன், தன்னைவிட, மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்கவேண்டும்.
௪.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.
௫.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
பொருள் வரும் வழிகளை மென்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்
Popularity: 5% [?]


1 response so far ↓
1 Tamil: A Classical Language as I Understand – 1 // Jun 23, 2010 at 1:11 PM
[...] யாம் அறிந்த செந்தமிழ் – ௧! [...]
Leave a Comment